குழந்தை பிரசவித்த 15 வயது மாணவி : பதுளையில் சம்பவம்!!
வயிறு வலியென்று கூறி அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி ஒருவர் இரண்டு மணித்தியாலத்தில் ஆண் குழந்தையொன்றை பிரசவித்துள்ள சம்பவமொன்று பதுளை லுணுகலை அரசினர் மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது.
லுணுகலைப் பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த 15 வயது நிரம்பிய மாணவியே இவ்வாறு குழந்தையொன்றைப் பிரசவித்துள்ளார்.
குறித்த மாணவியின் பெற்றோர் பசறையில் வசித்து வருவதனால் அம்மாணவி, லுணுகலை பகுதியின் அடாவத்தை பெருந்தோட்ட குடியிருப்பில் தமது தாத்தா, பாட்டியின் பராமரிப்பிலிருந்து கல்வி கற்று வந்துள்ளார்.
இந்நிலையில் தாத்தாவினால் குறித்த மாணவி பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டு கர்ப்பம் தரித்துள்ளமை தெரிய வந்துள்ளது.
இதையடுத்து லுணுகலைப் பொலிஸார் மாணவியின் தாத்தாவைக் கைது செய்து பதுளை மஜிஸ்திரேட் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தியதும் அவரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Average Rating