கள்ளக்காதல் விவகாரத்தில் ஆசிரியரை கொலை செய்து விட்டு நாடகமாடிய வாலிபர் கைது!!

Read Time:3 Minute, 42 Second

acff5784-022b-4fd8-9cdf-fcc80327bce2_S_secvpfமேற்கு வங்க மாநிலம் முஸ்ரிதாபாத் மாவட்டம் ஜலங்கியை சேர்ந்தவர் சுதிப் பிஸ்வாஸ்(வயது 30). பி.ஏ. பட்டதாரி. இவர் ஆரல்வாய்மொழி பகுதியில் செங்கல் சூளைகளில் வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு டியூசன் கற்று கொடுக்கும் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

கடந்த 22–ந் தேதி சுதிப் பிஸ்வாஸ் வீட்டில் ரத்தக் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து போனார்.

போலீஸ் விசாரணையில் சுதிப் பிஸ்வாசுக்கும், செங்கல் சூளை தொழிலாளியான மேற்கு வங்காளத்தை சேர்ந்த சரளா சர்தார் என்ற பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது தெரியவந்ததும், இதை பெண்ணின் கணவர் லூயிஸ் சர்தார் கண்டித்து வந்ததும், இதுதொடர்பான தகராறில் சுதிப் பிஸ்வாஸ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லூயிஸ் சர்தாரை தேடி வந்தனர். நேற்று அவரை கைது செய்தனர்.

அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–

எனது மனைவிக்கும், சுதிப் பிஸ்வாசுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இதனை நான் கண்டித்த பின்னரும் சுதிப் பிஸ்வாஸ் தொடர்ந்து என் மனைவியின் பின்னால் சுற்றினார். கடந்த 14–ந் தேதி நான் கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த போது அங்கு என் மனைவியுடன் சுதிப் பிஸ்வாஸ் தனிமையில் இருப்பதை கண்டேன். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எனவே சுதிப் பிஸ்வாசுக்கு தக்க பாடம் புகட்ட நினைத்தேன்.

கடந்த 21–ந் தேதி இரவு என் வீட்டுக்கு சுதிப்பிஸ்வாஸ் வந்தார். அப்போது அவரை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினேன். அவர் தப்பி ஓடி வீட்டுக்கு சென்று படுத்துக்கொண்டார். மறு நாள் சுதிப் பிஸ்வாஸ் ரத்தக் காயங்களுடன் கிடப்பதாக தகவல் வந்ததும், மற்றவர்களுடன் நானும் ஒருவராக சென்று அவரை தூக்கி ஆஸ்பத்திரியில் சேர்த்து நான் ஒன்றும் தெரியாதது போல நாடகமாடினேன்.

மேலும், என் மனைவியை ஆஸ்பத்திரியில் அருகில் இருந்து கவனிக்குமாறு கூறினேன். ஆனால் சுதிப் பிஸ்வாஸ் இறந்து போனதும் போலீசாரின் சந்தேகம் என் மீது திரும்பியதால் தலைமறைவானேன். ஊருக்கு தப்பி செல்ல முயன்ற போது போலீசார் என்னை கைது செய்துவிட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

இதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்புத் துறைமுகத்தில் வாகன உதிரிபாக களவு: இருவர் கைது!!
Next post (VIDEO) எனக்கு திருமணம் ஆகவில்லை என அழுத 6 வயது சிறுவன்!!