ஆலங்குளம் அருகே பிளஸ்-2 மாணவி தற்கொலை!!
Read Time:57 Second
ஆலங்குளம் அருகே உள்ள சுப்பையாபுரம் பகுதியை சேர்ந்தவர் வில்லியம் ஜோசப். இவரது மகள் ஷோபியா (வயது17). இவர் நெட்டூரில் உள்ள மேல்நிலை பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார்.
நேற்று விடுமுறையில் ஷோபியா படிக்கவில்லை. இதனால் அவரது தாயார் மல்லிகா சத்தம் போட்டுள்ளார். அப்போது மாணவி ஷோபியா அடகு வைத்த தனது நகையை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் மனம் உடைந்த ஷோபியா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating