வேலூரில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் பயிற்சி மாணவர் கைது!!
வேலூர் கொணவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கணியம்பாடியில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள் பயிற்சிக்காக வந்திருந்தனர். 10 நாட்கள் நடைபெற்ற பயிற்சி 13–ந் தேதியுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில் கடந்த 10–ந் தேதி பயிற்சிக்காக வந்திருந்த குடியாத்தம் வளத்தூர் கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் பயிற்சி மாணவர் இம்மானுவேல் கண்மணி (வயது 21) என்பவர் அந்த பள்ளியில் படிக்கும் 4–ம் வகுப்பு மாணவியை மதிய உணவு இடைவேளையின் போது ஆட்கள் இல்லாத வகுப்பறைக்கு அழைத்து சென்று, அங்கு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும், மேலும் அவர் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அந்த மாணவியிடம், அதே வகுப்பில் படிக்கும் மற்றொரு மாணவியை அழைத்து வரும்படி கூறி அவரிடமும் சில்மிஷம் செய்ததாக தெரிகிறது.
இதனால் பயந்து போன மாணவி வீட்டுக்கு சென்று தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூறி அழுதுள்ளார். மேலும் நான் இனிமேல் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் பெற்றோர், உறவினர் மற்றும் கொணவட்டம் பகுதியை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று முன்தினம் காலை பள்ளியை முற்றுகையிட்டனர். மேலும் அவர்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்கள் அங்கிருந்த தலைமை ஆசிரியர் பச்சையம்மாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி ரங்கநாதன் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து பணியில் கவனக்குறைவாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் பச்சையம்மாள் மற்றும் 4–ம் வகுப்பு ஆசிரியர் ஜான்சி ஆகியோரை சஸ்பெண்டு செய்ய மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி ரங்கநாதன் உத்தரவிட்டார்.
மேலும் இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஆசிரியர் பயிற்சி மாணவர் இம்மானுவேல் கண்மணியை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை இம்மானுவேல் கண்மணியை போலீசார் கைது செய்தனர். விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating