வீட்டுக்கு தீ வைத்ததால் கணவரை அடித்த கொன்ற மனைவி கைது!!
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பண்ணை தெருவை சேர்ந்தவர் கர்ணன் (வயது 50). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு மணிகண்டன், முரளி ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கர்ணன் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு மனைவி குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் திருட்டு வழக்கிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை ரேவதியின் சகோதரர்கள் செல்வராஜ், ரெங்கசாமி ஆகியோர் தட்டிகேட்டுள்ளனர். இதில் கோபம் அடைந்த கர்ணன் உம்பளச்சேரி அருகே உள்ள செம்பியமணக்குடியில் உள்ள தனது மைத்துனர்கள் வீட்டுக்கு தீவைத்து விட்டு ஓடிவிட்டார்.
அவரை மைத்துனர்கள் மற்றும் மனைவி ரேவதி ஆகியோர் தேடி வந்தனர். நேற்று ஊருக்குள் வந்த கர்ணனை அவரது மைத்துனர்கள் மற்றும் மனைவி ஆகியோர் பிடித்து கட்டி வைத்து உருட்டு கட்டையால் தாக்கினார்கள். இதில் பலத்த அடிபட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு, சப்–இன்ஸ்பெக்டர் அன்னை அபிராமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து செல்வராஜ், ரேவதி ஆகியோரை கைது செய்தனர். ரெங்கசாமி தப்பி ஓடிவிட்டார். அவரை தேடி வருகிறார்கள். கணவனை, மனைவி அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating