திருவனந்தபுரம் அருகே கல்லூரி மாணவியை உல்லாசத்துக்கு அழைத்த ஆசிரியர் கைது!!

Read Time:2 Minute, 25 Second

e9aa130b-ad6a-4da8-8011-201040c484d9_S_secvpfதிருவனந்தபுரம், சாத்தையில் ஒரு தனியார் ஐ.டி.ஐ. கல்லூரி உள்ளது.

இங்கு ஆசிரியராக பணிபுரிபவர் அஜய்னூசு (வயது 43). இவர் தனது வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவரின் செல்போன் எண்ணை தெரிந்து கொண்டார்.

அந்த எண்ணுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு மாணவியிடம் ஆபாசமாக பேசினார். மாணவி நாகரீகம் கருதி இதை வெளியில் சொல்லாமல் தவிர்த்தார்.

மாணவியிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பாததை தொடர்ந்து அந்த ஆசிரியர் அவரை உல்லாசத்துக்கு வருமாறு அழைத்தார்.

இதைக் கேட்டு அதிர்ந்து போன மாணவி இதுபற்றி பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறி அழுதார். அவர்கள் சம்பவம் பற்றி கல்லூரி முதல்வரிடம் புகார் செய்தனர்.

ஆசிரியரின் அத்துமீறல்கள் பற்றி மாணவி கண்ணீருடன் கூறிக்கொண்டிருந்த போதே மாணவிக்கு மீண்டும் ஆசிரியரிடம் இருந்து செல்போன் அழைப்பு வந்தது.

அந்த மாணவி ‘ஸ்பீக்கரை ஆன்‘ செய்து பேசினார். அப்போது ஆசிரியரின் ஆபாச பேச்சு அனைத்தும் முதல்வர் அறையில் இருந்த அனைவருக்கும் கேட்டது.

ஆத்திரமடைந்த அவர்கள் ஆசிரியரை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி, ஆசிரியரை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு தனியாக வரும்படி மாணவி மூலம் தெரிவித்தனர். அவரும் அந்த இடத்திற்கு வந்தார்.

அங்கு மறைந்திருந்த மாணவியின் உறவினர்கள் ஆசிரியரை சுற்றி வளைத்து பிடித்தனர். தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரை போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணைக்கு பின்னர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆசிரியர் அஜய்னூசு கைது செய்யப்பட்டார். மேலும் ஆசிரியரை தாக்கியதாக மாணவியின் உறவினர்கள் சிலர் மீதும் வழக்கு போடப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கன்னியாகுமரி அருகே இளம்பெண் மர்மச்சாவு!!
Next post 3–ம் வகுப்பு மாணவிக்கு செக்ஸ் தொல்லை: வாலிபர் கைது!!