இரு சிறுமியரை துஷ்பிரயோகம் செய்த அருட்தந்தை தற்கொலை!!
Read Time:57 Second
தேவாலயத்திற்குள் வைத்து சிறுமியர் இருவரை துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட அருட்தந்தை தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் கடந்த 15ம் திகதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட போது விஷமருந்தியுள்ளார்.
பின்னர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
மாதம்பை – இரட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த 30 வயதான ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating