கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை: காப்பாற்ற முயன்ற தந்தையும் பலி!!
அணைக்கட்டு காந்திரோடு பகுதியை சேர்ந்தவர் முனிசாமி (வயது 43). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி நாகலெட்சுமி. இவர்களது மகள் ரேவதி (17), பள்ளிகொண்டா பகுதியில் உள்ள தோல் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் ரேவதி நேற்று வேலைக்கு சென்று விட்டு தாமதமாக வீடு திரும்பினார். இது குறித்து முனிசாமி, ரேவதியிடம் கேட்டு உள்ளார். அப்போது தந்தை–மகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மனம் உடைந்த ரேவதி வீட்டை விட்டு வேகமாக வெளியேறி, அப்பகுதியிலுள்ள கிணற்றில் குதித்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த முனிசாமி, ரேவதியை காப்பாற்ற கிணற்றில் குதித்தார்.
கிணற்றில் சேறும், சகதியும் காணப்பட்டத்தால் 2 பேரும் வெளியே வர முடியாமல் தண்ணீரில் மூழ்கினார்கள். இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் ஒடுக்கத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தந்தை–மகள் 2 பேர் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating