வீதி திருத்தம் காரணமாக வாகனத்தை நிறுத்திய ஊழியரை தாக்குவது சரியா?
Read Time:1 Minute, 17 Second
யக்கலமுல்ல வீதி அபிவிருத்திப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரை அகங்கம பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவர் தாக்கியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கிருளபனை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஜயமால் சுதர்ஷன என்பரே தாக்கப்பட்டுள்ளார்.
உறுப்பினர் பயணித்த வாகனத்தை நிறுத்திய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே நேற்று (20) மாலை இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
தாக்குதல் நடத்தியவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும் சக ஊழியர்களே தன்னை காப்பாற்றியதாகவும் பாதிக்கப்பட்டவர் அஹங்கம பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.
மோதல் குறித்து இரு தரப்பினரையும் அழைத்து நாளை விசாரணை நடத்தவுள்ளதாக அஹங்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்
Average Rating