சிறுமிகளை அச்சுறுத்தும் கோமாளிகள்…? பீதியில் பிரான்ஸ்!!
பிரான்சில் பள்ளி மாணவிகளை கோமாளி வேடமிட்டு நபர்கள் சிலர் பயம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வடக்கு பிரான்சின் (Douai) டோயோய் நகரத்தில் உள்ள சிறுமிகளுக்கான தொடக்கப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளை நபர்கள் சிலர் கோமாளி வேடமிட்டு அச்சுறுத்தி வருகின்றனர்.
பள்ளியில் மாணவிகள் விளையாடும் நேரத்தில் திடீரென சுவர் ஏறி குதித்து பொம்மை துப்பாக்கிகளை காட்டி மிரட்டுதல், வீட்டிற்கு செல்லும் வேளையில் அவர்களை பின் தொடர்ந்து கத்தியை காட்டி மிரட்டுவது போன்ற செயல்களில் இந்த கோமாளி வேடமிட்டவர்கள் ஈடுபடுவதாக என கூறப்படுகிறது. இந்த தகவல்களை மாணவிகள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
ஆனால் இதை முற்றிலுமாக பொலிசார் மறுக்கின்றனர். இதுகுறித்து பொலிசார் கூறுகையில், இதுபோன்ற சம்பவங்கள் பிரித்தானியா அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் நிகழ்கின்றன என்றும் இங்கு மாணவிகள் தரப்பில் கூறப்படுவது எல்லாம் வதந்திகள் எனவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் மாணவிகள் தங்கள் கூறுவது உண்மை என வலியுறுத்தி கூறுவதால், தற்போது இது தொடர்பான விசாரணையை பொலிசார் நடத்தி வருகின்றனர்.
Average Rating