யாழில் முன்பள்ளிக்குச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு!!
Read Time:1 Minute, 12 Second
யாழில் ஆறு வயது சிறுவன் ஒருவன் கிணற்றில் விழுந்து நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி கிரேசியன் (வயது 6) என்ற சிறுவனே இவ்வாறு பலியாகியுள்ளார்.
குறித்த சிறுவன் வீட்டிற்கு அருகாமையில் உள்ள முன்பள்ளிக்குச் சென்றுள்ளார். 12 மணியான போதும் பிள்ளையை காணவில்லை என பெற்றோர்கள் இளவாளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை மாலை நேரம் பல பகுதிகளில் தேடிய பின்னர் முன்பள்ளிக்கு அருகாமையில் உள்ள பகுதியிலுள்ள கிணற்றில் சிறுவன் சடலமாக மிதந்துள்ளார்.
தற்போது, சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
Average Rating