வெள்ளவத்தை கடற்பரப்பில் பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம் மீட்பு!!
Read Time:43 Second
கொழும்பு வெள்ளவத்தை கடற்பரப்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளவத்தைப் பகுதியில் 42ஆவது ஒழுங்கைக்கு அருகிலுள்ள கடற்கரையில் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடற்கரையிலுள்ள கற்பாறைகளுக்கிடையிலிருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating