மாணவர்களை தாக்கியோர் பிணையில் விடுதலை!!
Read Time:57 Second
பலாங்கொட – பம்பகின்ன சந்தியில் சத்தியாக்கிரம் மேற்கொண்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஏழு பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (28) நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது பலாங்கொட நீதவான் ஜீ.லலித் கன்னங்கர இந்த பிணை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சந்தேகநபர்கள் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான வழக்கு அடுத்த வரும் மார்ச் மாதம் 10ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Average Rating