இருவேறு விபத்துகளில் மூவர் பலி!!
Read Time:1 Minute, 4 Second
குருநாகல் – புத்தளம் வீதி வாஸ்பொத்த பகுதியில் இடம்பெற்ற இருவர் உயிரிழந்துள்ளனர்.
வான் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் நேற்று இரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த மூவர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் மோட்டார் சைக்கிள் செலுத்துனரும் (32 வயது) பெண் (39 வயது) ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்த 18 வயது இளைஞன் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதேவேளை, ஹிங்குராங்கொட – வெஹெரகல குறுக்கு வீதியில் நேற்று மாலை டிரக் வண்டியொன்று வாவியில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 25 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.
Average Rating