கிழக்கில் ஆட்சி மாறுமா? முஸ்லிம் காங்கிரஸ் – கூட்டமைப்பு இடையே பேச்சு!!
Read Time:1 Minute, 12 Second
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் விரைவில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
கிழக்கு மாகாண சபையின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பு இடம்பெறும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கிழக்கு மாகாண ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
ஆனால் அதன்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் இன்னும் நிறைவேற்றவில்லை என சபீக் ரஜாப்தீன் தெரிவித்தார்.
இந்த பேச்சுவார்த்தைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு அழைப்பு விடுத்துள்ளது.
Average Rating