உடன்குடி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி வெட்டிக்கொலை!!
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள சிறுநாடார்குடியிருப்பு பஞ்சாயத்து போர்டு தெருவை சேர்ந்தவர் சித்திரைபட்டு (வயது 47), மரம் வெட்டும் தொழிலாளியான இவருக்கு சுயம்புகனி என்ற மனைவியும், 5 மகன்களும் உள்ளனர்.
நேற்று மாலை சுயம்புகனி தனது மகன்களுடன் பரமன்குறிச்சி அடுத்த பட்டன்விளையில் நடைபெறும் கோவில் விழாவில் கலந்து கொள்ள சென்று விட்டார். சித்திரைபட்டு மட்டும் வீட்டில்தனியாக இருந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை மர்மகும்பல் வீடு புகுந்து சித்திரைபட்டுவை தலையில் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிவிட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இன்று காலை சித்திரைபட்டு பிணமாக கிடப்பதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சித்திரைபட்டு உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் சித்திரைபட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
Average Rating