புடவைக் கடையில் திருட முயன்ற இளம் பெண்ணை அரைநிர்வாணமாக்கி அவமதித்த கடை முதலாளி!!
சீனாவில் உள்ள புடவைக் கடை ஒன்றில் திருட முயன்ற இளம்பெண் ஒருவரை அந்தக் கடையின் முதலாளி அரைநிர்வாணமாக்கியுள்ளார்.
39 வயதான மி இசுசி என்பவர் ஒரு புடவைக் கடை வைத்துள்ளார்.
இவரது கடையில் புடவை வாங்க வந்த ஒரு இளம்பெண் கடைக்காரரை ஏமாற்றி ஒருசில துணிகளை திருடியதை கடை முதலாளி சி.சி.டி.வி கெமரா மூலம் கண்டுபிடித்துள்ளார்.
உடனடியாக அப்பெண்ணை பிடித்து கடைக்கு வெளியே இழுத்து வந்து வலுக்கட்டாயமாக அந்தப் பெண்ணின் மேலாடைகளை கழட்டியுள்ளார்.
இதனால் அவமானத்தில் கூனிக்குறுகிப் போன அந்த இளம்பெண், கடை முதலாளியின் காலில் விழுந்து கதறி அழுது தன்னுடைய உள்ளாடையை மட்டுமாவது கொடுக்குமாறு கதறினார்.
ஆனால் கடை முதலாளி கொஞ்சம் கூட இரக்கப்படாமல் பொலிஸார் வரும் வரை அந்த இளம்பெண்ணை அரைநிர்வாணமாக வைத்திருந்தார். இந்த கொடூர காட்சியை அந்த பகுதியில் இருந்த பலர் பார்த்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.
பொலிஸார் வந்து திருட்டு பெண்ணை கைது செய்தனர். ஆனால் கடை முதலாளி மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து சீன பெண்கள் அமைப்பு கடை முதலாளி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating