கடத்தப்பட்டு, 6 மாதங்களாக நால்வரால் கற்பழிக்கப்பட்ட இளம்பெண் தப்பிவந்து போலீசில் புகார்!!
உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் நகரம் அருகேயுள்ள லக்கிபுரா பகுதியை சேர்ந்தவர் நூருதின். இவரது 20 வயது மகளை வாசிம் என்பவர் கடத்திச் சென்று விட்டதாக கடந்த 17-4-2014 அன்று போலீசில் புகார் அளித்தார்.
இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்தப் பெண்ணை தேடிவந்த நிலையில் கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து நேற்று தப்பிவந்த அவர் தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி பெற்றோரிடம் கூறி கதறினார்.
’சம்பவத்தன்று, நண்பர்கள் மூவருடன் சேர்ந்து என்னை லிஸாடி கேட் பகுதியில் இருந்து கடத்திச் சென்ற வாசிம்(25), பலவந்தப்படுத்தி எனது கழுத்தில் தாலியை கட்டி, கடந்த 6 மாதங்களுக்கு மேலாக ஒரு வீட்டில் அடைத்துவைத்து, என் விருப்பத்துக்கு மாறாக மேலும் 3 நண்பர்களுடன் சேர்ந்து, கற்பழித்து கொடுமைப்படுத்தினான்’ என்று பெற்றோரிடம் கூறி அந்தப் பெண் அழுதாள்.
இதனையடுத்து, அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வாசிம் மற்றும் அவனது கூட்டாளிகள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக இருக்கும் 4 குற்றவாளிகளையும் தேடிவருகின்றனர்.
Average Rating