புரோட்டா தகராறில் இளம்பெண் தற்கொலை!!
Read Time:1 Minute, 15 Second
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள கோகிலாபுரத்தை சேர்ந்த சரவணன் மனைவி மீனா (வயது19). சம்பவத்தன்று சரவணன் தனது மனைவிக்காக புரோட்டா வாங்கி வீட்டில் வைத்திருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த சரவணனின் உறவினர் அந்த புரோட்டாவை சாப்பிட்டு விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மீனா தனது கணவரை சத்தம் போட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
மனமுடைந்த மீனா வீட்டிற்குள் சென்று சேலையால் தூக்குபோட்டுக் கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.
உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Average Rating