மோட்டார் சைக்கிள் மின் கம்பத்தில் மோதி இரு இளைஞர்கள் பலி!!
Read Time:1 Minute, 0 Second
நீர்கொழும்பு கொச்சிக்கடை – மடம்பே பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
பெலேகடவில் இருந்து கடவல பகுதிக்கு சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (13) இரவு இடம்பெற்ற இவ்விபத்தில் இருவர் காயமடைந்து அக்கரகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.
17 மற்றும் 18 வயதுடைய இளைஞர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
சடலம் மீதான மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை இன்று (14) இடம்பெறவுள்ளது.
Average Rating