மலவாயிலில் மூன்று கிலோ தங்கம் கடத்தி வந்த இருவருக்கு சிக்கல்!!

Read Time:1 Minute, 31 Second

5387668431651395562mattala-new2டுபாயில் இருந்து ஒருகோடியே 45 லட்சம் ரூபா பெறுமதியான 29 தங்க பிஸ்கட்களை மலவாயிலில் மறைத்து இலங்கைக்கு கடத்தி வந்த இருவர் மத்தல விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மருதனை மற்றும் கட்டுகஸ்தொட்ட பகுதிகளைச் சேர்ந்த 57 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

ஒருவர் ஒரு கிலோ 300 கிராம் நிறையுடைய 13 தங்க பிஸ்கட்களை மலவாயிலில் மறைத்து வைத்திருந்ததுடன் மற்றுமொருவர் ஒரு கிலோ 600 கிராம் நிறையுடைய 16 தங்க பிஸ்கட்களை மலவாயிலில் மறைத்து வைத்திருந்துள்ளார்.

இவர்கள் இருவரும் மலவாயிலில் 2 கிலோ 900 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்துள்ளதாக சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

டுபாயில் இருந்து இன்று காலை 6.45 அளவில் மத்தல விமான நிலையத்திற்கு வந்த FZ-551 என்ற விமானத்தின் பயணிகளை சோதனை செய்தபோதே இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிள்ளை மழையில் நனைந்ததால் அதிபரை தாக்கிய பிரதேச சபை உப தலைவர் கைது!!
Next post கோழிக்கோட்டில் 7–ந்தேதி மீண்டும் முத்தப் போராட்டம்!!