இன்றும் மழை பெய்யலாம்!!
நாட்டின் சில பகுதிகளில் ஈரலிப்பான காலநிலை நிலவுவதோடு, கடும் காற்றுடனான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் மேல், மத்திய, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்று (23) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும், மழை வீழ்ச்சியின் அளவு 100 மில்லிமீற்றரைத் தாண்டலாம் எனவும் வானிலை அவதான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் பெரும்பாலான கடற்கரை பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியம் நிலவுவதாகவும், காற்று மணிக்கு 20 – 30 கிலோ மீற்றர் வேகத்தில் வீசலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதன்போது, இடி, மின்னல்களினால் ஏற்படும் சேதங்களை குறைக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Average Rating