விவசாயிகளின் போராட்டம் வெற்றி: இறக்குமதி வெங்காயத்திற்குத் தடை!!

Read Time:1 Minute, 33 Second

1219459114Untitled-1இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயங்களை, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இருந்து அகற்ற, கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தீர்மானித்துள்ளார்.

இது குறித்து அமைச்சரால் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக, கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் பேச்சாளர் நிபுன் ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயங்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஏ-9 வீதியை மறித்து இன்று காலை விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து விரைந்து செயற்பட்ட அமைச்சர் குறித்த வெங்காயங்களை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இருந்து அகற்றுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதனால் விவசாயிகளும் தங்களது போராட்டத்தை கைவிட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கே ஆதரவு! திகாம்பரம் முடிவு!!
Next post பிரதேச செயலாளர்களுக்கு பெப்ரலின் கோரிக்கை!!