நடிகர் ஜாக்கிசான் சொத்தில் பாதியை ஏழைகளின் நலனுக்காக எழுதி வைத்தார்
ஆலிவுட் படங்களில் நடிக்கும் சீன நடிகர் ஜாக்கிசான் சொத்தில் பாதியை ஏழைகளின் நலனுக்காக எழுதிவைத்தார். மீதிப்பாதியை மனைவிக்கும், மகனுக்கும் எழுதிவைத்தார். சீனாவில் உள்ள ஆங்காங்கை சேர்ந்தவர் ஜாக்கிசான். தொடக்க காலத்தில் சீனப்படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர். சண்டைப் படங்களில் நடிப்பதில் சரியான கில்லாடி. பிற்பாடு அவர் ஆலிவுட் படங்களில் நடித்தார். ரஷ் ஹவர்,ஷாங்காய் நூன் ஆகிய படங்கள் அவருக்கு பெரும்புகழ் தேடித்தந்தன.
அவர் நடித்து பெரும் பணம் சேர்த்து இருக்கிறார். இந்தப்பணத்தில் ஏழைகளுக்கு உதவுவதற்காக அவர் ஒரு அறக்கட்டளையைத் தொடங்கி நடத்தி வருகிறார். 1988-ம் ஆண்டு முதல் செயல்பட்டுவரும் இந்த அறக்கட்டளைக்கு நன்கொடைகள் குவிந்து உள்ளன. கிட்டத்தட்ட 300 கோடிரூபாய் பணம் சேர்ந்து உள்ளன.
இந்த நிலையில் அவர் தன்சொத்துக்கள் குறித்து உயில் எழுதி வருகிறார். இது பற்றி அவர் நிருபர்களிடம் கூறுகையில், நான் உயில் தயாரித்து உள்ளேன். அதன்படி சொத்தில் பாதியை ஏழைகளின் நலனுக்காக எழுதிவைத்து உள்ளேன். மீதிப்பாதியை மனைவிக்கும், மகனுக்கும் எழுதி வைத்து உள்ளேன் என்று குறிப்பிட்டார்.