வாணியம்பாடி அருகே துண்டு துண்டாக வெட்டபட்ட வாலிபர் பற்றி துப்பு துலங்கவில்லை!!
வாணியம்பாடி அருகே துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யபட்ட வாலிபர் யார்? என்பது குறித்து துப்பு துலங்கவில்லை.
வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி அருகே ரெயில்வே தண்டவாளத்தை யொட்டி துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டனர். இறந்தவருக்கு சுமார் 35 வயது இருக்கும். அவரது கால்கள் சிறிய டயர்களால் கட்டப்பட்டுள்ளது. அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதையடுத்து பிணத்தை மீட்ட போலீசார் அரசு அஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்தனர்.
கொலை நடந்த இடத்திலிருந்து சுமார் ½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள் புத்துக் கோவில் பகுதியில் அவ்வழியாக சென்று வரும் லாரிகளை ஓய்வுக்காக அதன் டிரைவர்கள் நிறுத்துவார்கள்.
இதனால் கொலை செய்யப்பட்டவர் லாரி டிரைவரா என்பது குறித்தும் அவரை கொன்றவர்கள் யார் எதற்காக கொலை செய்தனர் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபரை வெட்டி கொன்று ரெயிலில் அடிப்பட்டு இறந்ததாக நாடகமாட உடல் பாகங்களை தண்டவாளம் அருகே வீசியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
வாலிபரை நிர்வாணமாக்கி பின்னர் வெட்டியுள்ளனர். உடலில் அனைத்து பாகங்களும் சிதறியுள்ளன. கொலையான வாலிபர் யார்? என்ற விவரம் தெரியவில்லை. எந்தவித துப்பும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Average Rating