சேலம் காப்பகத்தில் இருந்து 2 பெண்கள் தப்பி ஓட்டம்!!
சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் லைப்லைன் டிரஸ்ட் உள்ளது. இங்கு ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் சுற்றி திரியும் பெண்கள் மற்றும் குழந்தைகளை பிடித்து வந்து தங்க வைத்து வருகிறார்கள்.
கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஆத்தூர் போலீசார் ஆத்தூர் பஸ் நிலைத்தில் சுற்றி திரிந்ததாக ஒரிசாவை சேர்ந்த குமாரி (வயது 17) என்ற பெண்ணை அழைத்து வந்து இங்கு அடைத்து வைத்து இருந்தனர். இதுபோல் சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் சுற்றிதிரிந்த கொல்கொத்தாவை சேர்ந்த சோனியா(17) என்ற பெண்ணை பிடித்து வந்து லைப் லைன் டிரஸ்ட்டில் அடைத்தனர்.
இவர்கள் இருவரும் நேற்று அதிகாலை லைப் லைன் டிரஸ்ட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். இவர்கள் தங்கி இருந்த அறையின் தாழ்ப்பாளை உடைத்து தப்பி சென்று உள்ளனர். இதை அறிந்த அங்கு தங்கி இருக்கும் மற்ற பெண்கள் இதுபற்றி லைப் லைன் டிரஸ்ட் நிர்வாகிகளிடம் தெரிவித்தனர்.
இதன் பேரில் அவர்கள் இந்த பெண்களை பல இடங்களில் தேடினர். ஆனால் அவர்கள் எங்கும் இல்லை. இந்த சம்பவம் குறித்து சேலம் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பெண்களையும் தேடி வருகிறார்கள்.
Average Rating