யாழ்: சொகுசு பஸ்சில் இருந்து கேரள கஞ்சா மீட்பு!!

Read Time:1 Minute, 21 Second

1424818808Untitled-1யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் சொகுசு தனியார் பஸ் ஒன்றினுள் இரண்டு கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 அளவில், யாழ். நீதிமன்றத்திற்கு அருகாமையில், பஸ்ஸின் பின் இருக்கையில் இருந்து இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

பஸ்ஸில் பயணித்த பயணிகளிடம் விசாரணை மேற்கொண்ட போது, கஞ்சாவினை கொண்டு சென்றவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் யாரையும் கைதுசெய்யவில்லை என்றும், கஞ்சாவினை கைப்பற்றி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும் இவற்றை நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பளிப்பேன்! மைத்திரி உறுதி!!
Next post பிரதேசசபை எதிர்க்கட்சித் தலைவர்கள் இருவர் அரசாங்கத்துடன் இணைவு!!