மைத்திரி – ஞானசார வழக்கு சமாதானமாக நிறைவு!!
Read Time:1 Minute, 5 Second
சட்டத்தரணி மைத்திரி குணரத்னவை அச்சுறுத்தியதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சமாதானத்தில் முடிவடைந்துள்ளது.
குறித்த வழக்கு இன்று (01) கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை சமாதானத்துடன் நிறைவு செய்து கொள்ள விரும்புவதாக வழக்கு தொடுநரான மைத்திரி குணரத்ன நீதிமன்றில் குறிப்பிட்டார்.
அதனை ஏற்றுக் கொள்ள தான் தயார் என ஞானசார தேரரும் அறிவித்துள்ளார்.
அதன்படி வழக்கை சமாதானமாக முடிவு செய்ய கோட்டை நீதவான் திலினி கமகே உத்தரவிட்டார்.
Average Rating