போலித் தங்கம் விற்கும் இருவர் சிக்கினர்!!
Read Time:1 Minute, 2 Second
போலி என சந்தேகிக்கப்படும் தங்கங்களை விற்பனை செய்யும் இருவர் அனுராதபுரம் நகரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள் கைதாகியுள்ளனர்.
இதன்போது, சந்தேகநபர்கள் வசமிருந்து தங்கமுலாம் பூசப்பட்ட கட்டிகள் மற்றும் 623 கிராம் தங்கம், ஈயக் கட்டிகள் 473 கிராமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 31 மற்றும் 32 வயதான இருவர் எனத் தெரியவந்துள்ளது.
இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Average Rating