கூடலூர் அருகே திருப்பூர் கார் டிரைவர் எரித்துக்கொலை: மனைவி-கள்ளக்காதலனிடம் விசாரணை!!
திருப்பூர் செரங்காடு 2–வது வீதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 43) கார் டிரைவர். இவருடைய மனைவி ராணி (31). கடந்த மாதம் 17–ந்தேதி வீட்டை விட்டு சென்ற கண்ணன் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கண்ணனின் தந்தை திருப்பூர் ஊரக போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை தேடி வந்தனர்.
விசாரணையில், கண்ணனின் நண்பர் சரவணனுக்கும் (40), கண்ணனின் மனைவி ராணிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதும், இதை கண்ணன் கண்டித்ததால் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அழைத்து சென்று கண்ணனை, சரவணன் கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டு உடலை எரித்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சரவணனை போலீசார் பொறி வைத்து பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது கண்ணனின் மனைவி ராணியும் உடந்தையாக இருந்ததாக சரவணன் கூறினார். இதையடுத்து ராணியையும் திருப்பூர் ஊரக போலீசார் பிடித்தனர். சம்பவம் நடந்த இடம் நடுவட்டம் என்பதால் நடுவட்டம் போலீசாரிடம் அவர்களை ஒப்படைத்தனர்.
Average Rating