கட்டுப்பணம் செலுத்துதல் இன்றுடன் நிறைவு: நாளை வேட்பு மனுத்தாக்கல்!!
Read Time:1 Minute, 19 Second
2015ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் இன்று நண்பகலுடன் நிறைவடையவுள்ளன.
கடந்த 24ம் திகதி கட்டுப்பணம் ஏற்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தற்போதுவரை 16 அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேட்சைக்குழுக்கள் இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மேலதிகத் தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரதாஸ குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாளையதினம் தேர்தலில் போட்டியிடுவோர் தங்களுடைய வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய முடியும்.
காலை 09.00 மணி தொடக்கம் 11.00 மணிவரை இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலக அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.
மேலும் தாக்கல் செய்யப்படும் வேட்பு மனுக்கள் தொடர்பான ஆட்சேபனைகளையும் அன்றையதினம் காலை 09.00 மணிமுதல் 11.30 வரை தெரிவிக்கமுடியும்.
Average Rating