மலப்புரம் அருகே கடைக்கு வந்த மாணவிகளிடம் செக்ஸ் தொல்லை: வியாபாரி கைது!!
Read Time:1 Minute, 12 Second
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மன்னார்காட்டில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் எதிர்புறம் அஜீஸ்(வயது 42) என்பவர் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.
கடந்த 12–ந் தேதி பள்ளியில் படிக்கும் மாணவிகள் 3 பேர் கடைக்கு பொருட்கள் வாங்க வந்தனர். அந்த மாணவிகளிடம் அஜீஸ் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து மாணவிகள் 3 பேரும் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தனர். அவர் மலப்புரம் மாவட்ட மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவிகளிடம் கடைக்காரர் அஜீஸ் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டது உறுதியானது. அதன்பேரில் கடைக்காரர் அஜீசை போலீசார் கைது செய்தனர்.
Average Rating