5 லட்சம் பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி!!
Read Time:1 Minute, 3 Second
தபால் மூலம் வாக்களிக்கவென வாக்காள் அட்டைகள் இன்று (15) திங்கட்கிழமை தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
தபால் வாக்காள் அட்டைகள் அடங்கிய பொதி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெரிவத்தாட்சி அலுவலகம் ஊடாக அரச நிறுவனங்களுக்கு வாக்காள் அட்டைகள் அனுப்பி வைக்கப்படும்.
ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 23ம் 24ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க 5 லட்சத்து 45 ஆயிரம் பேர் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating