கர்நாடகத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு: 4 சிறுவர்கள் கைது!!
Read Time:1 Minute, 22 Second
கர்நாடக மாநிலம் குல் பர்க்கா மாவட்டம் சித்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி. வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அதே ஊரைச் சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 4 பேர் கற்பழித்தனர்.
பின்னர் தப்பி ஓடி விட்டனர். பெற்றோர் வந்ததும் தனக்கு ஏற்பட்ட கொடுமை குறித்து சிறுமி கூறினாள். அதன் பிறகு போலீசில் பெற்றோர் புகார் செய்தனர்.
இதையடுத்து போலீசார் 4 பேரை கைது செய்தனர். அனைவரும் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால் போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கூறும்போது, கைதான 4 சிறுவர்களில் ஒருவன் சிறுமியின் உறவினர் என்று தெரிவித்தார். அவன்தான் நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொடூர செயலில் ஈடுபட்டான்.
சிறுமிக்கு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனையும் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.
Average Rating