பெண் மருத்துவர் மீது ஆசிட் வீசியதில் ஆண் மருத்துவருக்கு முக்கிய தொடர்பு!!
டெல்லியில் பெண் மருத்துவர் மீது நடத்தப்பட்ட ஆசிட் தாக்குதலில் ஆண் மருத்துவர் ஒருவருக்கு முக்கிய தொடர்பு இருப்பதாக காவல் துறை தெரிவித்தது.
கடந்த செவ்வாய் காலை 9.20 மணியளவில், டெல்லியின் ரஜோரி கார்டன் சாலையில், 30 வயதான பெண் மருத்துவர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் தான் வேலை பார்க்கும் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனம் ஒன்று அவரைக் கடந்து சென்றது. அதில் இருந்த இரண்டு வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பெண் மருத்துவர் முகத்தில் ஆசிட்டை ஊற்றிவிட்டு மறைந்தனர்.
இந்தக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு பேரும் சால்வையால் முகத்தை மூடியிருந்தனர். இந்த தாக்குதல், சம்பவம் அப்பகுதி மார்க்கெட்டில் உள்ள சி.சி.டிவி கேமராவில் பதிவாகியது. ஆசிட் வீச்சில் காயமடைந்த அந்த பெண் மருத்துவர் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த கொடூர தாக்குதலில் அவரது முகம் முழுவதும் வெந்து போயிருப்பதாகவும், வலது கண் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் உடனடியாக 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆண் மருத்துவர் ஒருவருக்கு இவ்வழக்கில் முக்கியத் தொடர்பு இருப்பதை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த தாக்குதலில் நான்கு பேருக்கு தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளதால் எஞ்சியுள்ள இரண்டு பேரை தேடி வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
Average Rating