குலசேகரன்பட்டினம் அருகே புதுப்பெண்ணை கத்தியால் குத்தி நகை பறிப்பு!!
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டிணம் அருகேயுள்ள கல்லாமொழி பதுவை நகரைச் சேர்ந்தவர் சைமன். இவரது மகள் வினிதா (வயது 21). இவருக்கு வருகிற 11–ந் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த 1–ந் தேதி அருகேயுள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்த புத்தாண்டு ஆராதனையில் கலந்து கொண்டு விட்டு வினிதா வீடு திரும்பி கொண்டிருந்தார். வீட்டின் அருகே சென்ற போது வினிதாவை வழிமறித்த மர்ம நபர் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார்.
கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த வினிதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து குலசேகரன் பட்டிணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை கத்தியால் குத்தி நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating