ஓட்டப்பிடாரம் அருகே காதல் ஜோடி தற்கொலை!!

Read Time:2 Minute, 16 Second

1f8a1a92-cac7-4b50-8dc2-2de88695c5c5_S_secvpfதூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அடுத்த பசுவந்தனை அருகேயுள்ள தீர்த்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமர். இவரது மகள் கங்காதேவி (வயது 15). இவர் பசுவந்தனையில் உள்ள அரசு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் சுரேஷ்குமார் (28) என்பவரும் காதலித்து வந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுரேஷ்குமார் தனது பெற்றோரிடம் கங்காதேவியை எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என கூறியுள்ளார். அப்போது அவரது பெற்றோர் கங்காதேவி படிப்பை முடித்தவுடன் திருமணம் செய்து வைக்கிறோம். இப்போது திருமணம் வேண்டாம் என கூறியுள்ளனர். இதனால் காதல் ஜோடி இருவரும் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தனர்.

சம்பவத்தன்று வாழ்க்கையில் வெறுப்படைந்த சுரேஷ்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே கங்காதேவி அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த பசுவந்தனை போலீசார் விரைந்து வந்து இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கங்காதேவி விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஓட்டப்பிடாரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உத்தரபிரதேசத்தில் காதல் விவகாரத்தில் பெண் கவுரவக் கொலை!!
Next post மைத்திரியா…? மகிந்தாவா….? அடுத்த ஜனாதிபதி??.. (ஒரு அலசல் ரிப்போர்ட்) -இரா.ஜயமோகன்!!