கிழக்கு தாம்பரத்தில் கஞ்சா விற்பனை செய்த மூதாட்டி கைது: கஞ்சா பறிமுதல்!!

Read Time:1 Minute, 3 Second

1e80ede5-2828-46fa-bb85-03958dc2f520_S_secvpfகிழக்கு தாம்பரம் முத்துராமலிங்க தேவர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் பரங்கிமலை துணை கமிஷனரின் தனிப்படையினர் கஞ்சா விற்பனை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு வீட்டில் துணி காய போடும் கொடியில் புடவையில் மறைத்து தொங்க விடப்பட்டிருந்த ½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து முனியம்மாள் (வயது 75) என்ற பெண்ணை கைது செய்தனர். அவரிடம் கஞ்சா விற்ற பணம் ரூ.1,300யையும் பறிமுதல் செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்யவும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கவும்!!
Next post உடன்குடி அருகே முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் ரூ.2 லட்சம் நகை திருட்டு!!