காதலிக்க மறுத்த மாணவியை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர்!!

Read Time:2 Minute, 7 Second

01242d18-ee04-4c58-a208-4c51b2c24f26_S_secvpfஒடிசாவில் மாணவியைக் கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஒடிசா மாநிலத்தின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பிரதாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தசரந்தா சாகு. இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான பிரியதர்ஷினியிடம் காதலிப்பதாகவும் கல்யாணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதில் தனக்கு விருப்பமில்லை என்று பிரியதர்ஷினி மறுத்துள்ளார். இருந்தும் தசரந்தா அடிக்கடி அவரிடம் தன்னை காதலிக்க வேண்டும் என்று தொல்லை கொடுத்துள்ளார்.

இருந்தும் பிரியதர்ஷினியிடமிருந்து எந்த பதிலும் வராததையடுத்து கடந்த புதன் கிழமை அன்று பக்கத்து கிராமத்திற்கு டியூஷன் சென்று விட்டு திரும்பி வரும் சாலையில் இரவு 9 மணியளவில் காத்திருந்த தசரந்தா, அந்தப் பெண்ணைக் குத்திவிட்டு தன்னையும் குத்திக் கொண்டுள்ளார். சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த கிராம மக்கள் சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அந்த பெண் பரிதாபமாக இறந்தார். அவரை கொலை செய்த வாலிபருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து, இறந்த பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பட்டப்பகலில் போலீஸ் ஏட்டை வெட்டிக் கொன்று நக்சல்கள் அட்டூழியம்!!
Next post அடுத்தவர் மனைவியை அபகரித்ததால் கொன்றோம்: கைதானவர்கள் வாக்குமூலம்!!