சிவகங்கையில் பிளஸ்–2 மாணவிகள் 2 பேர் தற்கொலை!!
சிவகங்கையை அடுத்த பழையனூர் அருகே உள்ள ஆலடிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகள் மணிமேகலை (வயது18). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார்.
இவர் சரியாக படிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை பரமசிவம் கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த மணிமேகலை வீட்டில் இருந்த பூச்சிமருந்தை குடித்துவிட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை, சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்.
இது குறித்து பழையனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை செந்தமிழ் நகரை சேர்ந்தவர் பாலு. இவரது மகள் பிரியதரணி (17), பிளஸ்–2 மாணவியான இவர் உடல் நலக்குறைவாக இருந்தார். இதற்கு சரியாக மாத்திரை எடுக்காததை தந்தை கண்டித்துள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த பிரியதரணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating