மனதில் பட்டதை சொல்லுங்கள்…!!
Read Time:1 Minute, 19 Second
இலங்கையில் 7வது ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்து ஆறாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதமராக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த புதிய கூட்டு அரசாங்கத்தின் அமைச்சரவையில் 27 பேர் மாத்திரம் இடம்பெற்றுள்ளனர். 10 இராஜாங்க அமைச்சர்களும் 9 பிரதி அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு, நீதி,தேர்தல் துறை சுயாதீனம், சுயாதீன ஆணைக்குழு அமைப்பு, 17வது திருத்தச் சட்டம் மீண்டும், ஊடக சுதந்திரம் உள்ளிட்ட பல கோரிக்கைகள் அடங்கிய 100 நாள் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்…. கருத்து வெளியிடும் சுதந்திரத்தை உறுதி செய்யுங்கள்..
Average Rating