தொழிலை விட்டு வெளியேற முயன்ற பெண் கொலை: கொல்கத்தா பாலியல் தொழிலாளிகள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்!!
Read Time:1 Minute, 20 Second
ஆசியாவிலேயே விபசாரத்துக்கு பிரபலமான கொல்கத்தாவின் சோனாகச்சி பகுதியில் பாலியல் தொழிலை விட்டு வெளியேற முயன்ற சத்தி தாஸ் என்ற 24 வயது பெண் சில நாட்களுக்கு முன்னர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலையை கண்டித்தும், இதைப்போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க வலியுறுத்தியும் இன்று நூற்றுக் கணக்கான பாலியல் தொழிலாளிகள் மெழுகுவர்த்தி ஏந்தி வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். பலியான சத்தியின் வீட்டில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் சோனாகாச்சியில் உள்ள ’அப்னே ஆப்’ தொண்டு நிறுவனத்தை சென்றடைந்தது.
இந்த ஊர்வலம் ஏன் நடத்தப்படுகிறது? என விளக்கிப் பேசிய அந்த நிறுவனத்தின் நிறுவனர், விபசார தொழிலுக்கு உரிய சட்ட அங்கீகாரம் கிடைத்தால் இதைப்போன்ற வன்முறைகள் குறையும் என குறிப்பிட்டார்.
Average Rating