தென்காசி அருகே இளம்பெண் கற்பழிப்பு: வாலிபர் கைது!!

Read Time:3 Minute, 14 Second

1fdeeea1-3d3b-454d-a8e7-23ecc70bd86d_S_secvpfநெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசையை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி அபிராமி (வயது26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அபிராமி கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

மேலும் அவர் அப்பகுதியில் கம்ப்யூட்டர் மையமும் நடத்தி வருகிறார். இந்த கம்ப்யூட்டர் மையத்திற்கு தென்காசி அருகே உள்ள வடகரையை சேர்ந்த பக்கீர் மைதீன் மகன் முகமது அன்சாரி (19) என்பவர் அடிக்கடி வந்து சென்றார். இதில் அபிராமிக்கும், அன்சாரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி, பழகி வந்துள்ளனர். அப்போது அன்சாரி, அபிராமியிடம் நான் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி உல்லாசம் அனுபவித்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அன்சாரி, அபிராமியின் கம்ப்யூட்டர் மையத்திற்கு வருவதை நிறுத்தி விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அபிராமி, அன்சாரி வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரிடம் உங்களது மகன் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி உல்லாசம் அனுபவித்தார்.

அவரை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என கூறியுள்ளார். அப்போது அன்சாரியின் தந்தை பக்கீர் மைதீன் மற்றும் அவரது தாய் மைதீன் பாத்திமா ஆகியோர் அபிராமியை மிரட்டி இதுபற்றி வெளியே கூறினால் உன்னை கொலை செய்து விடுவோம். எனது மகனை உனக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என கூறி விரட்டி விட்டதாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அபிராமி தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தன்னை ஏமாற்றி கற்பழித்த அன்சாரி மற்றும் கொலை மிரட்டல் விடுத்த அவரது தாய், தந்தை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஆதிவேல், சப்–இன்ஸ்பெக்டர் செல்வி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அன்சாரியை கைது செய்து நாங்குநேரி சிறையில் அடைத்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள அவரது தந்தை பக்கீர் மைதீன், தாய் மைதீன் பாத்திமா ஆகியோரை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விருத்தாசலம் பஸ் நிலையம் அருகே 100 போலி மதுபாட்டில் பறிமுதல்: 2 பேர் கைது!!
Next post இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் ஸ்ருதி!!