முசிறி மகளிர் போலீஸ் நிலையத்தில் லாரி டிரைவருடன் கல்லூரி மாணவி தஞ்சம்!!

Read Time:1 Minute, 58 Second

aefec9da-d82d-43f3-a2ed-4043b335e491_S_secvpf (1)முசிறி அருகே உள்ள சேருகுடி ஊராட்சியை சேர்ந்த வெள்ளையம்பட்டியில் வசிப்பவர் சரண்யா (21). இவர் தொட்டியத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கம்யூட்டர் சயின்ஸ் டிப்ளமோ படித்து வருகிறார். எரகுடி வெள்ளாளர் தெருவில் வசிப்பவர் அருள்ஜோதி (27) லாரி டிரைவர்.

இருவரும் முசிறிக்கு ஒரே பேருந்தில் வந்த போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இருவரும் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். சரண்யாவின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் தனது காதல் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற பயத்தில் சரண்யா தனது காதலன் அருள்ஜோதியுடன் சென்று தொட்டியம் சிவன்கோவிலில் கடந்த 17ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

பெற்றோர் தன்னை தேடுவதை அறிந்து பெற்றோர்களிடமிருந்து பாதுகாப்பு கேட்டு முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சியாமளாதேவியிடம் புகார் மனு அளித்தார். அதனடிப்படையில் போலீசார் இருவரது பெற்றோரையும் காவல் நிலையம் அழைத்து வந்து சமாதானம் பேசியதில் பெண்ணின் பெற்றோர் தனது மகளின் திருமணத்தை ஏற்க மறுத்து விட்டனர். அருள்ஜோதியின் பெற்றோர் சரண்யாவை தனது மருமகளாக ஏற்றுக் கொண்டு இருவரையும் மகிழ்ச்சியுடன் அழைத்து சென்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கௌதமியின் மகள் மட்டும் விதிவிலக்காக முடியுமா?
Next post அஜீத் வழியில் அனுஷ்கா!!