கற்பழிப்பு சம்பவம் நடந்த நான்கே மாதங்களில் மூன்று சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை!!
பீகார் மாநிலத்தின் போஜ்பூர் மாவட்டத்தில் காகிதம் பொறுக்கும் தொழில் செய்துவந்த மூன்று சகோதரர்கள் மீது தொடரப்பட்ட கற்பழிப்பு வழக்கில் சம்பவம் நடைபெற்ற நான்கே மாதங்களில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள குமுரி கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் ஜெய்பிரகாஷ் சிங்(32), நில்நிதி சிங்(30), ஜக்கு படிட்(26) ஆகியோர் அப்பகுதியில் உள்ள சுமார் 6 பெண்களுக்கு மது வாங்கித்தந்து அவர்கள் போதையில் இருக்கும் வேளையில் கூட்டாக சேர்ந்து கற்பழிப்பதை வாடிக்கையாக செய்து வந்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் சிக்கர்ஹட்டா போலீஸ் நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி அளித்த புகாரின் அடிப்படையில் அவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார், மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விரைவாக விசாரித்த நீதிபதி ஜே.பி. மிஷ்ரா, குற்றவாளிகள் மூவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி இன்று தீர்ப்பளித்தார்.
கற்பழிப்பு வழக்கில் நான்கே மாதங்களுக்குள் விசாரணை முடிந்து, தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating