65 வயதில் 2வது திருமணம்: விவசாயிக்கு அடி–உதை!!
Read Time:1 Minute, 5 Second
சிவகங்கை தாலுகா கீழசாலூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. 65 வயதான இவர் விவசாயி.
ஐம்பதிலும் ஆசை வரும் என்பார்கள். ஆனால் 65 வயதான பிறகும் கருப்பையாவுக்கு 2–வது திருமண ஆசை வந்தது.
இதற்காக 2–வது திருமணம் செய்ய முயற்சி செய்து வந்தார். இதை அவரது உறவினர்கள் கல்யாணி, முருகானந்தம் ஆகியோர் இந்த வயதில் 2–வது திருமணம் செய்யக் கூடாது என்று அறிவுரை கூறினார்கள்.
ஆனால் அதை கருப்பையா ஏற்கவில்லை. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் தன்னை அடித்து தாக்கியதாக கருப்பையா, சிவகங்கை தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் கல்யாணி, முருகானந்தம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating