பெண் போலீஸ் மானபங்கம்: ஓட்டல் அதிபர் மகன் கைது!!
கோவை சுந்தராபுரம் சந்திப்பில் பெண் போலீஸ் யோகலட்சுமி மற்றும் ஊர்க்காவல் படையினர் 2 பேர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கார் வேகமாக வந்தது.
காரை நிறுத்துமாறு சைகை காட்டினார்கள். கார் நிற்காமல் வேகமாக சென்றது. அந்த கார் பொதுமக்கள் உதவியுடன் மடக்கிப்பிடிக்கப்பட்டது.
அப்போது காரில் இருந்த வாலிபர் பெண் போலீசை ஆபாசமாக திட்டியதோடு தாக்க தொடங்கினார். ஊர்க்காவல் படையினர் தட்டிக் கேட்டனர். அவர்களையும் அந்த வாலிபர் தரக்குறைவாக பேசினார்.
போதையில் இருந்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் மதுக்கரை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து வாலிபரை கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவரது பெயர் அருண்குமார் (வயது 20) என்பதும், அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது.
அருண்குமாரின் தந்தை பிரபல ஓட்டல் அதிபர் ஆவார். மாணவர் அருண்குமாரின் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பெண்ணை மானபங்கப் படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல், தகாத வார்த்தைகளால் பேசுதல், கையால் தாக்குதல், பெண்ணுக்கு மானபங்கம் விளைவித்தல் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Average Rating