திருமண வரவேற்புக்கு சென்ற 7 வயது சிறுமி கற்பழித்து கொலை!!

Read Time:2 Minute, 8 Second

cfcffd5f-68ff-40b9-b697-2e31e532e34c_S_secvpfபுனேயின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பெற்றோருடன் சென்ற 7 வயது சிறுமி திடீர் என்று காணாமல் போய் விட்டாள்.

நேற்று ஓட்டலின் மாடியில் உள்ள சூரிய ஒளி மூலம் இயங்கும் வாட்டர் ஹீட்டர் எந்திரத்தின் அடியில் சிறுமி பிணமாக கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

உடனே போலீசார் சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி கற்பழிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

திருமண வரவேற்புக்கு வந்த சிறுமியை யாரோ ஏமாற்றி கடத்திச் சென்று கற்பழித்து கழுத்தை நெரித்து கொலை செய்து இருக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் கற்பழிப்பு கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சிறுமி கற்பழிப்பில் ஓட்டல் ஊழியர்கள் மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து ஓட்டல் ஊழியர்கள் சிலரை போலீசார் பிடித்துச் சென்று விசாரித்து வருகிறார்கள். சம்பவத்தன்று ஓட்டலில் கண்காணிப்பு காமிரா இயங்கவில்லை. இதனால் துப்பு துலக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

ஓட்டலில் சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டுக் கிடந்ததை அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஓட்டல் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். ஓட்டலுக்குள் புகுந்தும் சூறையாடினார்கள். அவர்களை போலீசார் லேசாக தடியடி நடத்தி கலைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரே வீட்டுக்கு மருமகளாக சென்ற உயிர் தோழிகள் தற்கொலை: மாமியார் அடித்துக் கொன்றதாக புகார்!!
Next post சேலம் எஸ்.கே.எஸ். ஆஸ்பத்திரியில் 3 வயது சிறுவனின் துண்டித்த விரலை ஒட்ட வைத்து சாதனை!!