பாலியல் பலாத்கார புகாரில் சிக்கிய புரோட்டா மாஸ்டர் விஷம் குடித்து தற்கொலை!!
Read Time:1 Minute, 17 Second
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பொட்டப்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பழனி (வயது50). இவர் கோவையில் தங்கி இருந்து புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 14–ந்தேதி கோவை துடியலூரில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முத்துப்பழனியை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊரான பொட்டப்பட்டிக்கு வந்த அவர், நேற்று மாலை அங்குள்ள ஓட்டல் முன்பு விஷம் குடித்து பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து கொட்டாம் பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாலியல் புகாரில் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்களோ என்று பயந்து முத்துப்பழனி தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது.
Average Rating