திருப்பதி கோவிலில் கூடுதல் லட்டு டோக்கனை எளிதாக பெற புதிய ஏற்பாடு!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு தவிர, தரிசன டிக்கெட் அடிப்படையில் ரூ.25 விலையில் கூடுதலாக 4 லட்டு வழங்கப்படுகிறது.
கூடுதல் லட்டு டோக்கன் வாங்க முன்பு தனி வரிசையில் காத்து இருக்க வேண்டிய நிலை இருந்தது. பக்தர்கள் அவதியை தீர்க்க தரிசன வரிசையிலேயே கூடுதல் லட்டுக்கான டோக்கன் வழங்கும் முறை அமுல்படுத்தப்பட்டது. இதன்மூலம் பக்தர்களுக்கு இருந்த சிரமம் குறைக்கப்பட்டது.
இப்போது கூடுதல் லட்டு டோக்கனை மேலும் எளிதாக பெற தேவஸ்தானம் புதிய ஏற்பாடு செய்ய உள்ளது.
இதன்படி தரிசன வரிசையில் உள்ள அனைத்து கம்பார்ட்மெண்ட்டுகளிலும் கூடுதல் லட்டு டோக்கன் பெறலாம். அதாவது 31 கம்பார்ட்மெண்டுகளிலும் கூடுதல் லட்டு டோக்கன் பெற கவுண்டர்கள் திறக்கப்பட உள்ளது.
விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தான கூடுதல் முதன்மை அதிகாரி சாம்ப சிவராவ் தெரிவித்தார்.
Average Rating